இதனை எதிர்த்து 2013ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது. 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அந்த ஆண்டே அதற்கான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.
வழக்கின் விசாரணை இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டே இருக்க, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முஷாராப் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, வெளிநாடு பாகிஸ்தானிலிருந்து வெளியேறி துபாய் சென்றுவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 19ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. தற்போது உள்ள விவரங்களின் அடிப்படையில் டிசம்பர் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு தலைமை வகிக்கும் பேஷ்வார் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது சேத் தெரிவித்திருக்கிறார்.
முஷாரப் அமிலோய்டு என்ற என்ற புரதச்சத்து அபரிமிதமாக உயர்வதால் ஏற்படும் அமிலோய்டோசிஸ் நோய் ஏற்பட்டு அவதிப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.