ஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி? இப்படி.

இயற்கையான முறையில் வீட்டை கூலாக வைப்பது எப்படி என்பது குறித்த விபரங்களை இங்கு காணலாம். இதில் அதிக சிரமமும் இல்லை, செலவினமும் இல்லை.


வெப்பமாக இருக்க முதல் காரணமே மின்விசிறி தான்:
வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணமே மின்விசிறி தான். மின்விசிறியில் இருந்து காற்று வந்தாலும், அது வெப்பக் காற்று தான். பகல் முழுவதும் வெயிலில் மொட்டை மாடி உள்ளது. மின்விசிறி போடும் போது, மொட்டை மாடியில் உள்ள வெப்பம் மிகவிரைவாக தரையிறங்குகிறது. இதனால் தான் இரவு நேரத்தில் மொட்டை மாடி குளிராக இருந்தாலும், வீட்டு அறையினுள் சூடாக உள்ளது.


மொட்டை மாடியை முதலில் கவர் செய்ய வேண்டும்:
எனவே, முதலில் மொட்டை மாடியில் வெயில் நேரடியா படுவதை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு மொட்டை மாடி முழுவதும் தற்காலிகமாக வெள்ளை சுண்ணாம்பு அடிப்பது ஒரு சிறந்த வழியாகும். தற்போது மார்கெட்டில் குறைந்த விலையில், வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு என்றே பிரத்யேகமாக பெயிண்ட் கிடைக்கிறது. அதிலும் வெள்ளை பெயிண்ட் அடித்தால், வெயிலை பிரதிபலித்து விடும். இதனால் வெப்பம் தரையிறங்காமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

இது தவிர மாடியில் பசுமை குடில், தென்னை ஓலை, சாக்குப் பை ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு பரவலாக மாடியில் ஆங்காங்கு போடலாம். இவற்றில் விலைக்குத் தக்கவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். தென்னை ஓலை தீப்பிடிக்கக்கூடும். எனவே, அதில் அவ்வபோது நீர் ஊற்ற வேண்டும்

முடிந்த அளவு சீலிங் மின்விசிறிக்குப் பதிலாக, மேசை மின்விசிறியைப் பயன்படுத்தலாம். இதனால் ஜன்னலில் இருந்து வரும் இயற்கையான காற்றை நமது பக்கம் திருப்ப முடியும். முடிந்தால் டேபிள் பேன் பின்புறத்தில், சற்ற தொலைவில் வாளி நீரை வைத்தால், இன்னும் குளிர் காற்று கிடைக்கும். சீலிங் மின்விசிறியைப் பயன்படுத்தும் போது, மாடி வெப்பம் ஈர்க்கப்பட்டு, வெப்பக் காற்று தான் வரும்.